அதிகாலையில் முதலாவதாய் எழுந்து..
அனைவருக்கும் முன் சென்றமர்ந்து
காத்திருந்தேன்..
வெளியே வரவே இல்லை.. வெகுநேரமாகியும்..
பொருமையுடன் அமர்ந்திருந்தேன்..!
அவசரப்பட்டு எழுந்து சென்றால்..
அலுவலகத்திற்குச் செல்லும் போது..
பாதி வழியில் திரும்பி வரவேண்டும்.!
அதையும் கடந்து அலுவலகம் சென்றால்..
முக்கிய ஆலோசனையில் அனைவரும் முகம் சுழிப்பர்!
அதையும் சமாளித்தால்..
மாலை அலுவலகம் முடியும் வரை..
அதே நினைப்பாக.. எந்த வேலையும் ஓடாது!
வேலையில் பல குறைகள்.. உயர் அதிகாரியிடம்..
நெளிந்து கொண்டே திட்டு வாங்க வேண்டும்..
ஒரு வழியாக.. மாலை 6 மணிக்கு முன்பே அவசரமாக கிளம்பி..
சாலை விதிமுறைவிளக்குகளை மீறி..
காவல்துறை அதிகாரிக்கு தெண்டம் அழுது..
அப்பப்பா.. நினைத்தாலே....
நேற்றும்.. அதற்து முன்பும் நடந்தவைகள் கண்முன்னே வந்துசென்றது..
ஒரு முடிவோடு அமர்ந்திருந்தேன்..
பார்க்காமல் செல்வதில்லை என்று..
கொசுகடி வேறு...
பள்ளி நாட்களில் அடிவாங்கியதும்..
'முயன்றால் முடியாதது எதுவுமில்லை' என ஆசிரியர் உரைத்ததும்..
நினைவில் வந்தது..
பல வழிகளில் முயற்சித்து.. ஒருவழியாக..
மெல்ல எட்டிப் பார்த்தது..!
அப்பாடா.. வந்தாச்சு.. பாத்தாச்சு..!
உப்ப்....
பெரிய நிம்மதிப் பெருமூச்சு......
உடலும், மனமும்.. இலேசானதை உணந்தேன்..
மற்ற வேலைகளை முடித்துவிட்டு..
சுறுசுறுப்படைந்தவனாய்...
முகமலர்ச்சியோடு வெளியேரினேன்..
நன்றாக விடிந்துவிட்டிருந்தது..!
காத்துக்கொண்டிருந்தனர் மேலும் இருவர்..
முடிந்ததா என்ற தலையசைப்பிற்கு..
ஒருவழியாக சுபமாக முடிந்தது என்று தலையசைப்பையே பதிலாக்கிவிட்டு..
புன்னகையுடன் நகர்ந்தேன்!
இனி ஒருநாள் முழுதும்..
பிரச்சனைகளின்றி.. பணியாற்ற உதவிய..
இந்த கழிவறை..
எனக்கு கோயிலாகப்பட்டது!
இதோ ஓரு சில.......
Sunday, October 4, 2009
Monday, October 27, 2008
அந்த ஒரு நாளுக்காக...
இங்கே...
இந்த திரிகள் கருவதற்காக
அங்கே...
எத்தனை கைகள் கருகியதோ!
வெடிக்கும் முன் முதலாவதாய் முந்தி நிற்கும்
இந்த திரிகளை உருவாக்கியது
எத்தனை பிஞ்சுகளின்.. கருகிய நெஞ்சங்களோ.. !
வைத்த நெருப்பால்...வெடித்த வெடியால்...
வீசும் வாசத்தை சுவாசிக்கும் முன் கொஞ்சம் யோசித்தால்
நெஞ்சம் வெடிக்கிறது
இங்கே... சிறுவன்
பட்டாசை "வெடித்துவிட்டு"
சத்தம் கேட்டு "கை தட்டுகிறான்"...
அங்கே... சிறுவன்
பட்டாசை "படைத்துவிட்டு"
பணம் கேட்டு "கை நீட்டுகிறான்"
இங்கே...
சில குழந்தைகள் பயத்தால் வீரிடுகிறது
சில குழந்தைகள் பற்றவைத்து வீசி பந்தாடுகிறது॥
அங்கே... குழந்தை தொழிலாளர்கள்
பட்டாசுத் தொழிற்சாலையில் சீரழிகிறது...
இங்கே...ஒரேநாளில் வெடிச்சாச்சு...
கொண்டாடி முடிச்சாச்சு...
வேலைக்கு, பள்ளிக்கு கிளம்பியாச்சு
மும்பரமாய்॥!
அங்கே...
எதிர்பாராத நெருப்பால் எப்போது வெடிக்குமோ
பயந்துகிட்டே வாழ்ந்தாச்சு
அந்த பயமும் பழகிப்போச்சு...
மீண்டும் அந்த கைகள்
மருந்துக் கலவையில்
திரிகளை சொருகத் தொடங்கியாச்சு
பம்பரமாய்...
நாம் பற்ற வைக்கும்
அந்த ஒருநாளுக்காக...!
இந்த திரிகள் கருவதற்காக
அங்கே...
எத்தனை கைகள் கருகியதோ!
வெடிக்கும் முன் முதலாவதாய் முந்தி நிற்கும்
இந்த திரிகளை உருவாக்கியது
எத்தனை பிஞ்சுகளின்.. கருகிய நெஞ்சங்களோ.. !
வைத்த நெருப்பால்...வெடித்த வெடியால்...
வீசும் வாசத்தை சுவாசிக்கும் முன் கொஞ்சம் யோசித்தால்
நெஞ்சம் வெடிக்கிறது
இங்கே... சிறுவன்
பட்டாசை "வெடித்துவிட்டு"
சத்தம் கேட்டு "கை தட்டுகிறான்"...
அங்கே... சிறுவன்
பட்டாசை "படைத்துவிட்டு"
பணம் கேட்டு "கை நீட்டுகிறான்"
இங்கே...
சில குழந்தைகள் பயத்தால் வீரிடுகிறது
சில குழந்தைகள் பற்றவைத்து வீசி பந்தாடுகிறது॥
அங்கே... குழந்தை தொழிலாளர்கள்
பட்டாசுத் தொழிற்சாலையில் சீரழிகிறது...
இங்கே...ஒரேநாளில் வெடிச்சாச்சு...
கொண்டாடி முடிச்சாச்சு...
வேலைக்கு, பள்ளிக்கு கிளம்பியாச்சு
மும்பரமாய்॥!
அங்கே...
எதிர்பாராத நெருப்பால் எப்போது வெடிக்குமோ
பயந்துகிட்டே வாழ்ந்தாச்சு
அந்த பயமும் பழகிப்போச்சு...
மீண்டும் அந்த கைகள்
மருந்துக் கலவையில்
திரிகளை சொருகத் தொடங்கியாச்சு
பம்பரமாய்...
நாம் பற்ற வைக்கும்
அந்த ஒருநாளுக்காக...!
Posted by
jaikavi
at
12:51 PM
1 comments
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Labels:
Deepavali
Thursday, March 27, 2008
சாராயம்
அனைத்தையும் மறக்க
அதுவே..
மருந்தென நினைத்துச் சென்றவன்..
அதை மறக்க தேடுகிறான்
மருந்தை!
அதுவே..
மருந்தென நினைத்துச் சென்றவன்..
அதை மறக்க தேடுகிறான்
மருந்தை!
Posted by
jaikavi
at
10:13 AM
0
comments
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Wednesday, March 26, 2008
லாட்டரி கடை
"லாபம் பரிசகம்"
பெயர் அருமை!
யாருக்கு லாபம்?
பெயர் அருமை!
யாருக்கு லாபம்?
Posted by
jaikavi
at
8:15 PM
0
comments
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
எறும்பு கடித்தது
உதறாமல் உடுத்தியதால்..
உதறினேன்
கை கால்களை!
உதறினேன்
கை கால்களை!
Posted by
jaikavi
at
8:11 PM
0
comments
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Friday, March 14, 2008
மரண ஓலம்
நடந்த பாதையை
மறுபடி கடந்து போகையில்
கேட்கிறது
மிதிபட்டு நசுங்கிய
எறும்புகளின்
மரண ஓலம்!
மறுபடி கடந்து போகையில்
கேட்கிறது
மிதிபட்டு நசுங்கிய
எறும்புகளின்
மரண ஓலம்!
Posted by
jaikavi
at
2:10 AM
0
comments
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Friday, March 7, 2008
வியர்வை
மேகம் கருக்கவில்லை
ஆனாலும், உழைக்கும்
அவனைச்சுற்றி மட்டும்
வீழ்ந்துகொண்டிருந்தது
துளி!
அவனிடமிருந்தே!..
Posted by
jaikavi
at
8:02 AM
1 comments
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Subscribe to:
Posts (Atom)